-க.ராஜ்குமார்-
Wednesday, June 30, 2010
பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?
-க.ராஜ்குமார்-
Friday, June 25, 2010
மே தின வரலாறு - May Day History
மரம் தனது கனிகளால் அறியப்படும்!
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 27-04-10
மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் கள் ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித் துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒரு வரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதி யாக முழக்கமிட்ட வார்த்தை இது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீது, காவல் துறையினரை நோக்கி குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந் தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர் கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி யன்று சிகாகோ நகரில் 40000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண் டிருந்தார். அமைதியான முறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொலலப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர்.
காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்ட மிடப்பட்டு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்கெட் என்ற பகுதியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜேட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டன கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந் தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்ட னர். இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரி யின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும் படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந் தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்த னர். காவல்துறையினர் உடனடியாக துப் பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர், காய முற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக் கப்படவே இல்லை.
இந்நிகழ்வைத் தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்க ளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என குற்றம் சாட்டப்பட்டு, 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டி ருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார் சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென் றிருந்தார். எனினும் தொழிலாளர் தலைவர் கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட் டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல் பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகி யோர் மட்டும்தான். ஆனால் 8 தலை வர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத் தனர். தங்களின் உரிமைக்கான போராட் டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர். அரசு வழக்குரை ஞரோ தலைவர்கள் பின்னால் ஆயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் திரண்டதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர் களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் தொழி லாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது. எங்களுக்கு வழங் கப்பட்ட மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி எங்கெங்கும் பரவி உரிமைக்கான போராட்டங்களாக கொழுந்துவிட்டெரியும் என முழக்கமிட்டார். 125 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.
கட்டுரையாளர், முன்னாள் மாநிலத் தலைவர், அரசு ஊழியர் சங்கம்
Thursday, June 24, 2010
மொழியின் அவசியம்
மொழிப்பற்று
-க.ராஜ்குமார்-
Wednesday, June 23, 2010
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு
பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - சட்டமாகுமா ?
தடைகளும் விடைகளும்
வேலை வாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை
-க.ராஜ்குமார்-
கடந்த நான்கு ஆண்டுகாலமாக காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள், பணியிடங்கள் குறைப்பு என தொடர்ச்சியாக பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வந்த தமிழக அரசு, இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் அரசுப்பணியில் மறு நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் மட்டுமல்லாமல் அநேகமாக அனைத்து கட்சிகளும் இளைஞர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் வாய்ப்பு பறிபோகும் என அஞ்சுவதால் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆணை தேவைதானா?
இந்த ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை குறித்து அரசு விளக்கமளிக்கையில், தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட காலஅவகாசம் தேவைப்படுவதால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது சரியா? சரி என்றால் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை மட்டும்தானே தற்காலிகமாக நிரப்பிட வேண்டும். ஆனால் அரசு பிறப்பித்துள்ள ஆணையில் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது வகித்து வந்த பதவியைக்காட்டிலும் உயர் பதவியில் அவரை நியமிக்கக் கூடாது எனவும், ஆனால் அவர் வகித்த பதவியைக் காட்டிலும் கீழ் பதவியில் பணியில் நியமிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் பதவி உயர்வு அளிக்க வேண்டிய பணியிலும் கூட ஓய்வு பெற்றவர்களை நியமிக்க முடியும் என்பதுதானே உண்மை. இதனால் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்படும் அல்லவா. தகுதி வாய்ந்த அரசு ஊழியர்கள் இருக்கின்றபோது அத்தகைய பணியிடங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு தயங்குவது ஏன். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பட்டியலுக்கு காலியிடங்களை நிர்ணயம் செய்திட அரசு நிபந்தனை விதித்திருந்ததால்தானே தற்போது தகுதியுள்ளவர்கள் இருந்தும் உயர் பதவிகளை நிரப்ப இயலவில்லை.
காலிப் பணியிடங்களை நிரப்பிட உள்ள அரசு விதி முறைகள்
காலிப்பணியிடங்கள் கலைப்பு
சற்று கவனமாக பரிசீலித்தால் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறை அரசுப்பணியின் அடிப் படை கட்டமைப்பையே சிதைத்துவிட்டதை உணரமுடியும். தமிழ்நாட்டில் கடந்த 2001ல் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுப் பணிக்கு நியமனம் செய்வதை தடை விதித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்றன. இறுதியில் கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் இறுதிக்காலத் தில் அந்த தடையை முற்றிலும் நீக்கிவிட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப்பணி யிடங்களை நிரப்புவோம் என வாக்குறுதி தந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள் விதித்தனர். தேவையின் அடிப்படையில் அரசால் ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெறுவதின் மூலமோ, பதவி உயர்வில் சென்றுவிடுவதின் மூலமோ, அரசு ஊழியர்கள் இறந்து விடுவதின் மூலமோ ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நியமன அலுவலர்கள் மீண்டும் அரசின் அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டி அதை ஆய்வு செய்து கணிசமான பணியிடங்களை குறைத்து ஆணையிடும். இப்படி பல்வேறு துறைகளில் இந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசியல்சட்டம் மீறப்படுகிறதா?
இந்திய குடியரசின் அரசியல் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டம் இயற்ற அரசியல் தலைவர்களுக்கு எப்படி அதிகாரம் கொடுத்துள்ளதோ, அதே போல் அந்த சட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்திட அரசு ஊழியர்களுக்கும் அதி காரம் கொடுத்துள்ளது. இதனால் தான் அரசுப் பணிக்கு ஆள் எடுக்கும் தனி அமைப்பாக அரசியல் சட்டம் தேர்வாணையங்களை உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் போன்று சுயாட்சி அதிகாரத்தை கொண்ட அமைப்புதான் தேர்வாணையங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற மத்திய-மாநில தேர்வாணைய தலைவர்கள் மாநாட்டில், அரசுப்பணிக்கு பின்புற வழியாக பணி நியமனம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது எனவும், இத்தகைய நியமனங்களை தேர்வாணையங்கள் அங்கீகரிக்கக் கூடாது எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய நியமனங் களுக்கு எதிராக பல்வேறு தீர்ப்புகள் பகரப்பட்டுள்ளன. எனினும் மத்திய-மாநில அரசுகள் இவைகளை கண்டுகொள்வதில்லை. இன்று தமிழக அரசில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற் பட்ட அலுவலர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இத்தகைய அரசின் நடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு மாற்று வழியில் திசை திரும்புகின்றன. அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசுப் பணிகளில் முறையான பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு முன் வரவேண்டும். தற்போது அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர்களை நியம னம் செய்ய வழிவகுக்கும் ஆணையை ரத்து செய்ய முன்வர வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் 3000 உள்பட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுவே அரசின் இன்றைய உடனடி பணி ஆகும்.