தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, December 15, 2010

Unemployment Problem

வேலை வாய்ப்பு கானல் நீரே!
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர்-16-12-10

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபல தொலைக்காட்சியில், ‘வேலை தேடி அலைந்தது அந்தக்காலம்! வேலை வீடு தேடி வருவது இந்தக்காலம்’ என்ற விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. பிரபல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் வேலைச் சந்தைகளை ஊயஅயீரள இவேநசஎநைறள யனே துடிப குயசைள நடத்தியதற்கான விளம்பரமே இது! இத்தகைய வேலைச் சந்தைகளில் எந்த அளவு வேலை கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! காலப்போக்கில் பல கல்லூரிகள் இத் தகைய வேலைச் சந்தைகளை நடத்தி அதன் மூலம் நல்ல வருவாயை பெருக்கிக்கொண்டதுதான் மிச்சம்! சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய வேலைச் சந்தை ஒரு கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு, அது வெறும் போலித்தனமானது என்பது தெரியவர, மாணவர்கள் கொதித்தெழுந்து அந்தக்கல்லூரி வளாகத்தையே ஒரு போர்க்களமாக மாற்றிக்காட்டினர்.

உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று உலகமயத்தை வானளாவ புகழ் பவர்கள், உலகமயம், தாராளமயம், தனி யார் மயம் என்ற கொள்கைகள் வேலை வாய்ப்புகளை சிதைத்து வருவதை மறைக்கப்பார்க்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமல்ல, உள்ள வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வளர்ச்சியாக ‘மயங்களின்’ வளர்ச்சி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தொலைத்தொடர்புத்துறையில் ஏற் படுத்தியுள்ள வேலைவாய்ப்புகளை மிகைப்படுத்திக்காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார வீழ்ச்சி இத னையும் அம்பலப்படுத்திவிட்டது. இத் தகைய துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆயிரக்கணக்கில் பணி இழந்து நாடு திரும்பி வருகின்றனர். கடந்த ஆண்டு (2009) நாடாளுமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டு நிறு வனங்கள் விசாவை புதுப்பிக்காமல் விட்டு விட்டதால் 20 ஆயிரம் இந்தி யர்கள் வேலை இழந்து நாடு திரும்பி யுள்ளனர் என்று தெரியவருகிறது. இன்று லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை , ஊதியக் குறைப்பையும் சந்தித்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இந்த ஆண்டு (2010) செப்டம்பர் மாதத்தில் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூட்டு மாநாட்டில், மோசமாகி வரும் இன்றைய வேலையின்மை மற்றும் வறுமை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 2010-ம் ஆண்டு இதுவரை மட்டும் 210 மில்லியன் தொழிலாளர்கள் வேலை யின்றி உள்ளனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும், உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத் திட்டங்களையும் கொண்டிருக்க வில்லை என்றும், கிட்டத்தட்ட 12 பில்லி யன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வரு கின்றனர் என்றும், அமெரிக்காவில் வேலையின்மை என்பது 7.5 மில்லி யனிலிருந்து 15 மில்லியனுக்கு மேல் உயர்ந்துவிட்டது. ஐரோப்பா முழுவதும் 23 மில்லியனுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். இது 2007-ல் இருந்ததை விட 36 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் உரையாற்றிய, சர்வ தேச தொழிலாளர் அமைப்பின், வேலை கள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த ஐரோப்பிய ஆணையாளரான லாஸ்லோ ஆண்டர் குறிப்பிடுகையில், 2010 வேலை யின்மையை பொறுத்தவரை 2010-ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என் றும் இதை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் 2011-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக மாறிவிடும் என எச்சரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எப் தலைவர் டொமினிக் ஸ்ட் ராஸ் கான், ‘உலக நிதி நெருக்கடி என்பது, வேலையின்மை என்ற வீணடைந்த பூமியை கொண்டுவந்துள்ளது’ என்றும் ஒரு வேலை பெறுவது என்பது ‘வாழ்வா சாவா’ என்ற பிரச்சனையாக மாறிவிட் டது என்றும், உயரும் வேலையின்மை வன்முறை மோதல்களுக்கு வழிவகுக் கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டின் முக்கிய பேச்சாளர் களான ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ, கிரேக்க அமைச் சர் ஜோர்ஜ் பாபபாண்ட்ரூ, வேலை யின்மை இப்படியே நீடித்தால் ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதன் விளைவாகவே சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் நாட்டு தேர்தல்களில் ஆளுங்கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு, அங்கு தொங்கும் நாடாளுமன் றங்கள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் ஓபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக் காவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சரா சரியாக ஒரு மாதத்திற்கு 13 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. ஊக்கு விப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட போதும் நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு கடந்த ஓராண்டாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமை உலகம் முழுவதும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு ஆவணம், வேலை இழப்பு களால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அரசியல் திறனில் தீவிரமடைந்திருப் பதை சுட்டிக் காட்டுகிறது. உலகெங் கிலும் வேலை கிடைக்காத இளைஞர் களின் எண்ணிக்கை 6.6 மில்லியன் ஆகும். வேலையின்மை என்பது ஜனநா யகத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பி யிருப்பதாகவும், இது ஒரு மாற்றுத் தலை மையை நாடிச் செல்லும் என்றும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மா நாட்டில் கலந்துகொண்ட முதலாளித் துவ நாடுகளின் தலைவர்கள், வேலை யின்மை குறித்து கவலைப்பட்டவர் களாக காட்டிக்கொண்டாலும், முதலா ளித்துவம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாளர் வர்க்கத்தின ருக்கு எந்தவித தீர்வுகளையும் அளிக்க இயலாத நிலைமையை மாநாட்டு விவா தத்தில் காண முடிந்தது. இச்சூழலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் களிடையே புரட்சிகர உணர்வுகள் எழுச்சி பெறுவது முதலாளித்துவ சக்தி களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டின் இறுதி அறிக்கையானது, “வேலைகளை தோற்றுவிக்கும் வளர்ச்சி” “வறுமையில் வாடும் மக்க ளுக்கு குறைந்தபட்சம் சமூகப் பாதுகாப்பு நிலை” ஆகியவற்றிற்கு உழைப்பதாக உறுதிமொழி கூறியுள்ளது.

இந்த மாநாட்டின் வாயிலாக முத லாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள உலகளவிலான நெருக்கடியை உணர்ந்து கொண்டுள்ளது. அது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை பறித்திட திட்டமிட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் இதை புரிந்துகொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாராவதே இன்று தலை யாயக் கடமையாக உள்ளது.


Saturday, December 4, 2010

Careless in Water Management

வெள்ளப்பெருக்கும், வீணாகும் தண்ணீரும்!
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் - 3-12-10

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் ஓரளவு கூடுதலாக தமிழகத் திற்கு மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் என்றாலும், தமிழகம் வெள்ளக்காடாக மாறி, ஆங்காங்கே மக்கள் துன்பத்தில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது. மாநி லம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்க ரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. மக்களின் உட மைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள் ளது. இயற்கையின் சீற்றத்தால் இழப் புகள் ஏற்பட்டுள்ளது என்றாலும், வெள் ளப்பெருக்கை முறையாக தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க மாநில அரசு தவறி விட்ட தும் ஒரு காரணமாகும்.

பற்றாக்குறை காலங்களில் அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெறுவதற்காக முயலும் மாநில அரசு, மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீர் கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

உபரி நீரை சேமிப்பதன் மூலம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல்; வெள்ளப் பெருக்கெடுத்து விவசாய நிலங்களையும், மக்கள் வாழும் இடங் களையும் சேதப்படுத்துவதிலிருந்து பாது காக்க முடிந்திருக்கும். சோழ மன்னர் களாக தங்களை சித்தரித்து மகிழ்ச்சி அடைபவர்கள், சோழ மன்னர்கள் காவிரி பெருக்கெடுக்கும் காலங்களில் சேமிப்ப தற்காக அமைத்த நீர்த்தேக்கங்கள் போல; தேவை அறிந்து இக்கால கட்டத் தில் அமைக்க தவறிவிட்டனர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுகொள்ள ளவை எட்டியுள்ளது. 2005-ல் மேட்டூர் அணை ஒரே ஆண்டில் நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ல் மட் டும் 400 டிஎம்சி நீர் உபரியாக வெளி யேற்றப்பட்டடது. 2006-ல் 300 டி.எம்.சி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2 அன்றைய நிலவரப்படி மேட் டூர் அணையில் அந்த ஆண்டு முழு வதும் 100 அடிக்கு குறையாமல் நீர் மட்டம் இருந்து வந்தது என்பது அணை யின் வரலாற்றில் ஒரு சாதனையாக கரு தப்பட்டது. 2007-ம் ஆண்டு 100 டி.எம்.சி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட் டுள்ளது. இப்படி அடிக்கடி மேட்டூரி லிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு கட லில் கலக்கிறது. இந்த நீரை சேமிப்பதற் கான வழிமுறைகளை ஆராய அரசு இப்போதாவது முன்வர வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட லூர் மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 110 அடிக்கு மேல் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். காரணம், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிச்சயம் அது தன் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதற்குமேலும் நீர்வரத்து இருக்கும் என்பதால் அவை அப்படியே திறந்து விடப்பட்டால் கடலூர் மாவட்டம் அதனால் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை அவர்கள் தெரிவித்துள் ளனர். எனவே முன்கூட்டியே நீரை வெளி யேற்றி வெள்ளப்பெருக்கை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்று முன்கூட்டி அறிந்து செயல்படு கின்ற தேவை இன்று தமிழக அரசிற்கு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற் கெனவே அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நிரம்பி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. மேட்டூரிலும் அணை நிரம்பி விட்டதால் வெளியேற்றப்படும் உபரி நீர் கடலூர் மாவட்டத்திற்கு பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடும்; என அஞ்சப்படுகிறது.எனவே வெள்ளப்பெருக்கை கட்டுப் படுத்துவதற்கும் உபரி நீரை சேமிப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உபரி நீர் வீணாவதை தவிர்த்து, சேமிப் பதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தமிழக அரசிற்கு ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து 24-08-2007-ல் திருச்சியில் என்.ஐ.டி-யில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியுள்ளார். ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துகொண்டிருக்கையில், ஓர் நீர்த் தேக்கம் நிரம்பாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, இவைகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும்; நீரையும் சேமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இன்று வெளிப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் அதன் மிக அருகில் உள்ள பவானி சாகர் அணை நிரம்பாமல் உள்ளது. மேட்டூரின் உபரி நீரை பவானி சாகர் அணைக்கு திருப்ப வழி காண வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் தனது உரையில், தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்களை இணைப்பது தொடர்பாக காமராஜ் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கொடுத் துள்ள அறிக்கையை தமிழகத்தின் இரு முதலமைச்சர்களிடமும் தான் கொடுத் திருப்பதாகவும், அவர்களும் இந்தப் பிரச்சனை குறித்து அறிந்துள்ளதால் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் உள்ள சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப் பாறை, சோலையாறு, பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளை இணைப்பது குறித்தும், அதுபோலவே ப+ண்டி, சோழ வரம், ரெட்ஹில்ஸ், செம்பரப்பாக்கம், வீராணம் மற்றும் முகவை மாவட்டத்தி லுள்ள ஏரிகளை இணைப்பதற்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பொதுவான நீர்வழிப் பாதை (கூயஅடையேனர றயவநச றயலள ழுசுஐனு) அமைக்க லாம் என்றும், இந்த திட்டத்தை 5 கட்ட மாக 5 முதல் 8 ஆண்டுகளில் நிறை வேற்ற முடியும் என்றும், இதற்கு 36,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 350 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - வைகை அணைகளை இணைப்பது என்றும், இரண்டாவது கட்டமாக 250 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - பள்ளார் நீர்த்தேக்கங்களை இணைப்பது என்றும், 3-வது கட்டமாக 150 கி.மீ. இடை வெளி உள்ள வைகை - தாமிர பரணி ஆறுகளை இணைப்பது என்றும், நான் காவது கட்டமாக 130 கி.மீ. இடைவெளி உள்ள தாமிரபரணி பெருஞ்சாணி நீர் நிலைகளை இணைப்பது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 4600 கோடி ரூபாய் ஒதுக்கினால் இத்திட்டங்களை படிப்படி யாக நிறைவேற்ற முடியும்..

இந்த திட்டத்தை நிறைவேற்றினாால், அதன் காரணமாக * ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி சேதாரங்களை தவிர்க்க முடியும், * 7,50,000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு கொண்டு வர முடியும்* 2150 மெகாவார்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்* நிலத்தடி நீர் உயரும் என்பதால் மின் சாரம் கொண்டு நீர் பெறுவதை தவிர்ப் பதன் மூலம் 135 மெகாவார்ட்ஸ் மின் சாரம் மிச்சம் செய்ய வாய்ப்பு உண்டு.* 5 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரும் கிடைக்கும்* 900 கி.மீ.தூரத்திற்கு நீர்வழிப்பாதை அமைவதால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் சாலைப் போக்குவரத்து செலவுகளை கட்டுப் படுத்த முடியும்.* மீன் வளத்தை பெருக்க முடியும். * வெளி மாநில சுற்றுலாவாசிகளை ஈர்க்க முடியும்.இவ்வளவு நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும். இதனை வெகுஜன அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள கட்சிகள் இணைந்து ஆக்கப்ப+ர்வமான வழி காண வேண்டும்.