தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Thursday, January 13, 2011

அரசால் விலைவாசியை கட்டுபடுத்த முடியாதா ?

விலைவாசியை யார் கட்டுப்படுத்துவது?
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் - 14-௦1-2011

சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கவலையோடு குறிப்பிட்டபோது இடைமறித்த நிதி அமைச்சர் க.அன்பழகன், விலைவாசி உயர்வு குறித்து தனது ஆழ்ந்த வேதனை யை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விலை உயர்விற்கு காரணமான பதுக்கல் முதலாளிகள் யார்? வெங்காய வியாபாரி கள் யார்? என்பதை மார்க்சிஸ்ட் உறுப் பினர்கள் சொன்னால், நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைப்பதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள் ளார். அது மட்டுமல்லாமல் பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும்; அது போலத் தான் விலைவாசி உயர்வும். இதற்கு யாரைக் கண்டிப்பது? விலைவாசியை குறைக்க வழிகள் இருந்தால் கம்யூ னிஸ்ட்கள் அரசிற்கு வழி கூறலாம் எனவும் திருவாய் மலர்ந்துள்ளார்.

ஆட்சி, அதிகாரம் என்ற அரியணை யில் அமர்ந்துகொண்டு விலைவாசியை குறைக்க வழி கேட்கும் தமிழக நிதி அமைச்சரின் போக்கு வியப்பிற்குரியது. ஒரு அரை நூற்றாண்டுக்காலம் தமிழக அரசில் அமைச்சர் பதவி வகித்து வருப வர், 1967-ல் தமிழ்நாட்டில் கடும் விலை வாசி உயர்வின் காரணமாகவே காங்கிரசி டமிருந்து ஆட்சியை கைப்பற்றிய திரா விட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பொறுப்புமிக்க அமைச்சர், விலைவாசி உயர்வு என்பது இயற்கை இன்னல்களை போன்றது என்று கூறி யிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

விலைவாசிக்கு என்ன காரணம்? எப்படி குறைக்க முடியும் என்பதை தமிழ கத்திற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கும் உரிய முறையில் ஆலோசனைகளை கூறிவருவது மார்க்சிஸ்ட் கட்சியாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனை களை திமுக இடம் பெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுங் காணாமல் விட்டுவிட்டது பேராசிரிய ருக்கு தெரியாதா?

பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே எப்பொழுது வேண்டுமா னாலும் உயர்த்திக்கொள்ளலாம் என அறிவித்தது திமுக பங்கேற்றுள்ள ஐ.மு. கூட்டணி ஆட்சியல்லவா? விலைவாசி உயர்விற்கு இது முக்கிய காரணம் என்பது அறிவார்ந்த அமைச்சருக்கு தெரியாதா? ஊக வணிகத்தை தடை செய்ய வேண் டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது இடதுசாரிகளல்லவா? மத்திய அரசு குறைந்த விலைக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டு, அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்ததை இந்திய நாட்டுமக்கள் அறியாதவரா? தவறான கொள்கையின் காரணமாக பொது விநி யோக முறையை சீரழித்தது மன்மோகன் சிங் அரசு என்பது அமைச்சருக்கு தெரி யாதா? இதற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து போராடி வருவதும் உண் மையல்லவா. கட்டுப்பாடற்ற வணிகத் தை கொண்டுவந்து காய்கறி கடைவரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, அரசின் கட்டுப்பாட் டில் எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய ஐ.மு. கூட்டணி அரசில் திமுக முக்கிய கூட்டாளியல்லவா?

மேற்கு வங்கத்தில் எரிபொருள் விலை ஏறினால் அதற்கொப்ப மாநில அரசின் வரியை உயர்த்தாமல் உள்ள தைப்போல் தமிழக அரசு செய்யமுன் வருமா? மேற்கு வங்கத்தில் 19-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்வதைப் போல் தமிழ்நாட்டில் செய்திட முன் வருமா?

வெங்காய இறக்குமதி குறித்து பேசும் அமைச்சர், பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவர தயாரா? இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் உணவுப் பொருள்கள் ஊக வணிகத்தில் சிக்கிக்கொண்டு தவிப்பது அரசிற்கு தெரியாதா?

விலைவாசி உயர்வால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, இலவசம் என்ற பெயரில் சொற்ப பொருட்களை கொடுத்து விளம்பரம் செய்வதை தவிர்த்து, அனைத்து உணவுப் பொருட்களையும் மலிவு விலையில் தருவதற்கு அரசு தயாரா?

பூகம்பம் வறட்சியுடன் விலைவாசி யை ஒப்பிட்டு பேசும் அமைச்சர், இவை வருவதை முன்கூட்டி அறிந்திட விஞ் ஞானம் வழிவகுத்திருப்பதை அறியாத வரா? பருவ மழை பொய்த்துப் போனால் மக்களின் உணவு தேவைக்கு முன் கூட்டியே சேகரித்து வைப்பது அரசின் கடமை என்பதை மறந்துவிட்டாரா அமைச்சர். தமிழக அரசின் உணவுத் துறையும், தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் விலைவாசியை கட் டுப்படுத்திட வகுத்த திட்டங்கள் என்ன என்ன என்பதை விளக்கிட அமைச்சர் முன்வருவாரா? திட்டங்கள் ஏதும் இல்லை என்றால், இவைகள் எதற்காக உள்ளன என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டியது அமைச்சரின் பொறுப் பல்லவா?

யார் யார் பதுக்கல் பேர்வழிகள் என் பது கம்யூனிஸ்ட்களை விட, அவர்களிட மிருந்து தேர்தலுக்கு நன்கொடை பெறு பவர்களுக்கு தெரியாதா? உணவுப் பொருள் தானியங்கள் இருப்பு வைப்ப தற்கு கட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? அத்தியா வசியப் பொருட்கள் பராமரிப்புச்சட்டம் (நுளளநவேயைட ஊடிஅஅடினவைநைள ஹஉவ) தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? எல்லா கட் டுப்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு பதுக்கல் பேர்வழிகளை காட்டுங்கள் என்பதா?

கேரள கம்யூனிஸ்ட் அரசு விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட நிதி நிலை அறிக்கையில் 80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ( கேரள அரசின் நிதி நிலை மதிப்பு ரூ.11,030 கோடியாகும்). இதைப் போல் ஐந்து மடங்கு வருவாயை கொண்ட தமிழக அரசு, விலைவாசியை கட்டுப்படுத்திட எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது?

தமிழக மக்கள் கடுமையான விலை வாசி உயர்வால் தத்தளித்துக்கொண் டுள்ளபோது, நிதிஅமைச்சர் விலைவாசி உயர்வு குறித்து வியாக்கியானம் செய்வார் என்றால், 1967 ம் ஆண்டை அவர் மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. “பருப்பு விலை என்ன ஆச்சு? பக்தவத்சலம் அண்ணாச்சி” என்றெல்லாம் 1967 தேர்தல் களத்தில் திமுக தரப்பிலிருந்து முழக்கம் எழுந்தது. இன்று விலைவாசித் தீ வீடு தோறும் பற்றி எரிகிறது. தமிழக மக்கள் மீண்டும் உரிய முறையில், விலை வாசிக்கெதிராக 1967-ல் தீர்ப்பளித் ததைப்போல் இந்த ஆண்டும் தீர்ப் பளிப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத் தரப்பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற் கொள்கையில், ஒரு மாணவர் விலை வாசி உயர்வு குறித்து கேட்டபோது, எனது பாட்டி இந்திராகாந்தி இருந்திருந்தால் விலைவாசி குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருப்பார். கூட்டணி ஆட்சியான தால் நடவடிக்கை எடுக்க முடியவில் லை என தெரிவித்துள்ளார். இதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தேசியவாத கட்சியின் பொதுச் செய லாளர் தாரிக் அன்வர் கன்டனம் தெரி வித்துள்ளார். இதே கூட்டணியில் அங் கம் வகித்து வரும் திமுகவின் பொதுச் செயலாளர் இதற்கு கண்டனம் தெரிவிக்க தயாரா?

விலைவாசியின் சீற்றத்தை உணராத வராக காட்டிக்கொள்ள நிதிஅமைச்சர் முற்படுகிறார். விலைவாசியின் கொடு மையால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள, அமைச்சர் சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வினை நியாயப்படுத்தி பேசியிருப்பதைக்கண்டு ஆவேச மடைந்துள்ளனர். வார்த்தை ஜாலங் களால் வெகுநாட்கள் மக்களை ஏமாற்ற முடியாது. தன் பசி தீர்க்கும் வழியினை மனிதன் கண்டறிவான். அப்போது அவனை யாரும் தடுத்து நிறுத்திட முடி யாது என்பதே வரலாறு நமக்கு உணர்த் தியுள்ள பாடம்!

Sunday, January 9, 2011

Tamilnadu Government recruitment policy - review

வேலைவாய்ப்பு: சொன்னதும் செய்ததும்
-க.ராஜ்குமார் -
நன்றி -தீக்கதிர் 3-01-11
தமிழக முதல்வர், சமீபத்தில், வேலை வாய்ப்பு அன்றும் இன்றும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 40 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட் டுள்ளார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பகத் தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த அறிக்கையை கண்டு ஏமாற்றம் அடைந்துள் ளனர். மக்களை திசை திருப்ப இந்த அறிக் கை வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் இத னால் வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

மறைமுகமான பணி நியமனத் தடை ஆணை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறை களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்கு றுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன், காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக மறைமுகமான ஒரு தடை ஆணையை பிறப் பித்தது. (ஆணை எண். 91. ப.ம.நி.சீ.து.நாள் 6-07-2006) இந்த ஆணையை கண்டவுடன் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆணையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் பணி நியமனத் தடை ஆணை 212 ப.ம.நி.சீ. தி.து. நாள் 29.11.2001 விலக்கிக்கொள்ளப்பட்டு, அரசு ஆணை, 14 ப.ம.நி.சீ.தி.து நாள் 21.02. 2006ல் வெளியிடப்பட்டது. இந்த ஆணை, பணி நியமனத் தடை ஆணைக்கு முன் இருந்த நிலையில் காலிப்பணியிடங்களை துறைத்தலைவர்கள் நிரப்பிட அதிகாரம் அளித்தது. ஆனால் அரசு ஆணை எண். 91ல் ஸ்டாப் கமிட்டியின் முன் அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்டாப் கமிட்டி, துறைத் தலைவர்களின் பரிந்துரையை பரிசீலனை செய்து காலிப்பணியிடங்களில் ஒரு குறிப் பிட்ட விழுக்காட்டை கலைத்து ஆணை யிட்டு வருகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் வேளாண்மைத்துறை, தொழிலாளர் நலத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான பணி யிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அரசு இதை மறுக்க முடியுமா? தற்போதும் அரசு ஆணை 123ல் பணியிடங்களை நிரப்பிட துறைத் தலைவர்களின் அதிகார வரம்பை சுருக்கி ஆணையிடப்பட்டுள்ளது உண்மை யல்லவா?

காலிப்பணியிடங்கள்

இன்றும் பொது சுகாதாரத்துறையில் சுகா தார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் 5000க்கும் மேற் பட்டவை காலியாகவுள்ளன. வருவாய்த்துறை யில் மக்களின் அன்றாடப் பணிகளை மேற் கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் 3000க்கும் மேலாக காலியாக உள் ளன. இதே துறையில் உதவியாளர் நிலையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் மற் றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியா ளர் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. துணை முதல்வரின் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர் நிலையில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஊராட்சி ஒன்றி யங்களில் அரசுப் பணிகள் தேக்கமடைந்துள் ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வரு வாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையி லேயே பணியிடங்கள் காலியாக வைக்கப்பட் டுள்ளன என்றால், ஏனைய துறைகளில் கேட்கவே வேண்டாம். அரசிற்கு பெரும்பான் மையான வருவாயை ஈட்டித்தரும் வணிக வரித்துறையில் 3000க்கும் மேற்பட்ட பணி யிடங்கள் அனைத்து நிலைகளிலும் காலி யாகவுள்ளன. தொழிலாளர் நலத்துறையில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. நீதித்துறையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வேலைவாய்ப்பகத்தில் சரிபாதி பணியிடங் கள் காலியாகவுள்ளதால் வேலைவாய்ப்பிற் காக பதிவு செய்யவரும் இளைஞர்களும் நிவா ரணம் பெறவரும் இளைஞர்களும் நாள் கணக் கில் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளி லும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளன. இவ்வளவு ஏன்? கோட் டையில் உள்ளஅரசின் தலைமைச் செயல கத்தில் 30 சதவீதத்திற்கும் மேலான பணி யிடங்கள் காலியாகவுள்ளன. அரசுப்பணியா ளர்களை நியமனம் செய்யும் பணியில் ஈடு பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்திலும் 30 சதவீதத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாகவுள்ளன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது என்பது முதல்வருக்கு தெரியாதா?

நிரப்பப்பட்ட பணியிடங்கள்

முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ள இலட்சக்கணக்கான பணியிடங் களில் முறையான ஊதியத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரம்தான்! மற்றவை தொகுப்பூதி யம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என விதவிதமாக ஊதியம் நிர்ணயம் செய்து உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கப்பட் டுள்ளது என்பதுதான் உண்மை.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றிவரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்களுக்கு சொற்பத் தொகையை உயர்த்தி, ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத் தையே மூன்றாக பிரித்து அதற்கு சிறப்பு கால முறை ஊதியம் என பெயரிட்டு இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தைப் போல் கணக்கு காட்டி ஏமாற்ற முயற்சி நடைபெற்றுள்ளது. ஏமாறப்போவது மக்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், வருவாய்த்துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் 2500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணையிடப்பட் டது. அதன் தொடர் நடவடிக்கையே இந்த ஆட்சியில் தேர்வு நடத்தப்பட்டு, கிராம நிர் வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட னர். இதற்கு பிறகு இன்று 3000க்கும் மேற் பட்ட பணியிடங்களை நிரப்பிட அரசு ஆற அமர நடவடிக்கை எடுத்து, தேர்வாணையத் தால் தேர்வு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி தேர்வு நடைபெற்று பணி நியமனம் செய்வதற் குள் இன்னும் 3000 பணியிடங்கள் காலியாகி விடும். ஆக எப்பொழுதும் 3000 பணியிடங் கள் காலியாக வைத்திருப்பதே அரசின் நோக் கமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் தொகுப்பூதிய அடிப் படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள், முறையான ஊதி யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பணிநியமனத்தின்போதே அன் றைய அரசு முதலில் 5 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்படுவார் கள் என்றும், பின்னர் 3 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படு வார்கள் என்றும் ஆணை பிறப்பித்திருந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர் போலும்.

கடந்த 20 ஆண்டுகளாக எரிசக்தித்துறை யில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் ரூ.400 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று சிஐடியு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந் தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றது மட்டுமல்லாமல், அரசிற்கு ஆதர வான சங்கங்களை வைத்து ஒப்பந்த ஊழியர் கள் படிப்படியாக மஸ்தூர்களாக ஹெல்பர்க ளாக நியமனம் செய்யப்படுவார்கள் என உடன்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அரசு, அதை தனது சாதனை யாக வெளிப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

வேலைச் சந்தைகள்

வேலைச்சந்தைகள் மூலமாக இலட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங் கப்பட்டது போலும், இன்னும் சில ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது. மாவட்டங்களில் நடைபெற்ற வேலைச் சந்தைகளில் பங்கேற்று ஏமாற்றம டைந்துள்ள இலட்சக்கணக்கான இளைஞர் கள் முதல்வரின் அறிக்கையை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். எந்தெந்த நிறுவனங் களில் எத்தனை ஆயிரம் பணியிடங்கள் நிரப் பப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருகின்ற வேளையில், பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியிழந்து வருகின்ற நிலையில், முதல்வரின்அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந் துள்ளது. தொண்டறம் பேணும் அமைப்புகளு டன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மேற் கொண்ட முயற்சிக்கு அறிக்கையில் சுட்டிக் காட்டும் அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரும் என்றால், அரசின் வேலைவாய்ப்புத் துறையே ஏன் அந்தப் பணியினை தொண்டறம் பேணும் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தக்கூடாது? அதற்கேற்றவாறு அரசு சட்டம் இயற்ற முன்வருமா? இடஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள் போன்ற சிறப்பு ஒதுக் கீடு இத்தகைய வேலைச்சந்தைகளில் கிடைக்க அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கிட முன் வர வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளா தாரப் பின்னடைவு இன்று வேலையின்மை யை அதிகரித்துவிட்டது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ள நிலை யில், வெறும் புள்ளி விபரங்கள் பயன் அளிக் காது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பினை உரு வாக்கிட அரசு முன்வரவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.