தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, November 18, 2011

TNGEA 10th State Conference - Krishnagiri

அரசு ஊழியர்களின் விடிவெள்ளி
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் 19-11-2011





appan பரதன், தமிழக அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்கள். 1970-ல் நடைபெற்ற என். ஜி.ஓ.யூனியன் தேர்தலில் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் சங்கத்தை சேர்ந்த தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.பரதன் ஆகியோர் சிவ இளங்கோவுடன் சேர்ந்து ஒரு அணியை அமைத்து தேர்தலில், அரசுக்கு விசுவாச மான தேவநாதன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிவ இளங்கோ தலைவராகவும். எம்.ஆர் அப்பன் பொருளாளராகவும், புறநகர் துணைத்தலைவராக ஜே.எஸ். பரதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

என்.ஜி.ஓ.யூனியனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அன்றைய முதல்வர் கருணா நிதி விரும்பவில்லை. எனவே தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவஇளங்கோ, அரசுடன் இணக்கமாகவே இருக்க விருப்பப்பட்டார். ஆனால் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்அப்பன் மற்றும் பரதன் போன்றவர்கள் இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் செயல்படுபவர்கள் என ஆட்சிyalargal கருதுவதால் இவர்களை கழட்டிவிட அவர் திட்டமிட்டார்.

என்.ஜி.ஓ. மாநாடு- சேலம்

1972-ம் ஆண்டு சேலத்தில் நடை பெற்ற மாநாட்டில் அன்றைய முதலமைச் சர் கலைஞர் கலந்துகொண்டார். இம் மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான ஊழியர்கள், தங்களுக்கு ஊதியம், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முழக்கமிட்டு பேரணி யில் வந்தனர். மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல மாவட்டங்கள் வலி யுறுத்தின. இவைகளுக்கு காரணம் எம்.ஆர்.அப்பனும், பரதனும்தான் என என்.ஜி.ஓ. யூனியன் தலைமை கருதியது. எனவே இவர்கள் இருவரையும் சங்கத்தி லிருந்து நீக்கிவிட தீர்மானித்தது.

இந்நிலையில் எம்.ஆர்.அப்பன் பொதுச்செயலாளராக இருந்த ஐ.டி.ஐ சங் கத்தில் துறைவாரியான கோரிக்கைக ளுக்காக வேலை நிறுத்தம் 1972 டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு என்.ஜி.ஓ.யூனி யன் ஆதரவு கிடையாது என அறிவித்த சிவஇளங்கோ, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர். அப்பனை நீக்கிவிட்டார். அதனை தொடர்ந்து என்.ஜி.ஓ.யூனியன் பொருளா ளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆதரவாக இருந்த ஜே.எஸ்.பரதனும் மாநில துணைத்தலைவர் பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டடார்.

நடவடிக்கைக் குழு

என்.ஜி.ஓ.யூனியனிலிருந்து நீக்கப்பட் டவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச் சியில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஏ.கூடலிங்கம் தலைமையில் என். ஜி.ஓ.யூனியன் நடவடிக்கைக் குழுவை துவக்கி செயல்பட்டனர். இதன் விளை வாக அரசு கடுமையான நடவடிக்கை களை மேற்கொண்டது.

தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்களை யும் ஐ.டி.ஐ சங்கத்தின் சில தலைவர் களையும் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 311 2(ஏ) (பி) (சி) -ன் கீழ் பணிநீக்கம் செய்ய அன்றைய கலைஞரின் அரசு ஆளு நருக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தின் மாநிலத் தலைவரும் நடவடிக் கைக் குழுவின் தலைவருமான மதுரை ஆர்.ஏ.கூடலிங்கம் ஓய்வு பெறும்வரை யிலும் (1975) தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் கண்காணிப்பாளராக பணி யாற்றிவந்த டி.என்.எஸ் என்கிற தோழர் சீனிவாசன், தட்டச்சராக பணி இறக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக் குழுவின் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கே.இரங்கநாதன் கட்டாய ஓய்வில் அனுப் பப்பட்டார். இதுபோல தமிழகம் முழு வதும் பல தோழர்கள் அரசால் பழிவாங் கப்பட்டனர். எனினும் அச்சமின்றி தோழர்கள் இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

பொது வேலை நிறுத்தம் - 1978

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், என்.ஜி.ஓ. யூனியன் தலைமை, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தை நடத்தியது. சிவ இளங்கோ திமுக அனுதாபி என்ற காரணத்தினால் அன் றைய முதல்வர் எம்.ஜி.ஆர். போராட்டங் களை அடக்க முயன்றார். 1978-ம் ஆண்டு ஜூன் 5 அன்று கோட்டையை நோக்கி சென்ற பேரணியை காவல்துறை யினர் பலப்பிரயோகம் செய்து தடுத்து நிறுத்தியதால், அதே இடத்தில் சிவ இளங்கோ வேலை நிறுத்தத்தை அறிவித் தார். ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் நடவடிக்கைக் குழுவும் கலந்து கொண்டது. எனினும் சந்தர்ப்பவாத தலைமை இந்த போராட்டத்தின் இறுதி யில் அரசிடம் சரண் அடைந்தது. போராட்டக் காலத்தில் நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் தமிழகம் முழு வதும் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து நடந்த சங்க தேர்தலில் நடவடிக்கைக் குழு பங்கேற் பது என்ற முடிவினை எடுத்தது. நடவடிக் கைக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறு பாடின் காரணமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாநில தேர்தலில் தோல்வியை தழுவினாலும், வேலூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினர் வெற்றி பெற முடிந்தது. வெற்றி பெற்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினரின் நடவடிக்கைகள் ஊழியர்களை ஈர்ப்பதை கண்ட சிவஇளங்கோ, 1984ம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாவட்டங்களில் சங்க தலைவர்களை நீக்கினார். இப்படி நீக்கப் பட்டவர்கள் வேலூரில் 01-04-1984-ல் கலந்து ஆலோசனை செய்து அரசு ஊழியர் சங்கத்தை துவக்க முடிவு செய்தனர்.

மதுரையில் அமைப்பு மாநாடு

மதுரையில் 1984-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் அரசுஊழியர் சங்கம் உதய மானது. மதுரையில் நடைபெற்ற மாநாட் டில் அரசுஊழியர் சங்கத்தின் அமைப்பா ளராக தோழர் எம்.ஆர்.அப்பன் அவர் களும். என்.எல்.சீதரன் பொருளாளராக வும் 21 தோழர்களைக் கொண்ட மாநில நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. தலைவராக கே.கங்காதரன் தேர்வு செய் யப்பட்டார். சங்கத்தின் அமைப்புச் சட்ட விதியை உருவாக்கிட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் தோழர் எப்.எம்.குத்புதீன் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது

பத்தாவது மாநில மாநாடு

அரசு ஊழியர் சங்கத்தின் 10-வது மாநிலமாநாடு, கிருஷ்ணகிரியில் நவம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நடைபெறும் இம்மாநாடு மக் கள் பணியாளர்களின் துயர்துடைக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 27 ஆண்டுகாலமாக செயல்பட்டுவரும் அரசுஊழியர் சங்கம், போராட்டப்பாதை யில் முன்னேறி வரும் சங்கமாகும்.

தாடியுடன் பிறந்த குழந்தை

1990-ல் கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசுஊழியர் சம் மேளனத்தின் 7-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற வெளி மாநிலத்தை சேர்ந்த அரசுஊழியர் சங்கங்களின் தலைவர்கள், 1984-ல் துவக்கப்பட்ட அரசுஊழியர் சங்கம் ஒரு குறுகிய காலத் தில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவதை கண்டு வியப்பு தெரிவித் தனர். இதுகுறித்து அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அன்றைய பொதுச் செயலாளர் சுகுமால்சென் குறிப் பிடுகையில், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் துவங்கி ஆறு ஆண்டுகளாயினும் அதன் முன்னோடிகள் தமிழக அரசு ஊழியர் இயக்கங்களில் நெடுங்காலம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றவர் கள். அந்த அனுபவங்களின் முதிர்ச் சியை தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் பெற்றுள்ளது. அரசுஊழியர் சங்கம் தாடியுடன் பிறந்த குழந்தை என பாராட்டிப் பேசினார்.

அரசுஊழியர்களின் விடிவெள்ளி

அரசுஊழியர் சங்கம் தோன்றிய பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைமை மேம்படுத்தப்பட்டது. பணிப் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத் தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் என மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராட் டங்கள் நடத்தியதன் மூலமாக அவர்க ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதிய மேம்பாடு கிடைத்தது. அரசுஊழியர் சங்கம் இன்றும் புதிய பென் சன் திட்டத்தை எதிர்த்தும், காலிப் பணி யிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறது. அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் வழங்கிட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு ஊழியர்களின் உரிமை களுக்காக போராடும் அரசு ஊழியர் சங்கம், தமிழக அரசுஊழியர்களின் அங்கீ காரத்தை பெற்றுள்ள சங்கமாக, விடி வெள்ளியாக திகழ்கிறது.

Friday, November 11, 2011

ஏமாற்றம் தரும் புதிய பென்சன் திட்டம்!
-க.ராஜ்குமார் -
நன்றி தீக்கதிர் 10-11-11

மத்திய ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டம் பாரதிய ஜனதா தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2003-ல் கொண்டு வரப்பட்டது. 23-08-2003-ல் பிஎப்ஆர்டிஏ என்ற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் அமைக் கப்பட்டது. 10-10-2003ல் மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பித்ததின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

புதிய பென்சன் திட்டத்திற்கான மசோதா இந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் நாடாளு மன் றத்தில், பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து இதற்குமுன் வரலாறு கண்டிராத வகையில், மத்திய-மாநில அரசு ஊழியர் சம்மேளனங் கள், அகிலஇந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, இரயில்வே மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர் சம்மேளனங்கள் ஒன் றிணைந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன. வரும் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று நாடுமுழுவ தும் கோடிக்கணக்கான மக்களிடம் புதிய பென்சன் மசோதாவிற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசில்..

நாடாளுமன்றத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், புதிய பென் சன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய நீதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீநமோநாராயண் மீனா அளித்த பதில்-

- 2004 ஜனவரி 1-க்குப் பிறகு, ஆயுதப் படை தவிர, மத்திய அரசில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

- 2010 ஏப்ரல் 30 வரை இத்திட்டத்தில் மத் திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களைச் சேர்ந்த 6 லட்சத்து 17 ஆயிரத்து 278 சந்தாதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்தி கண்காணித்திட ஊசுஹ எனப்படும் ஊநவேசயட சுநஉடிசன மநநயீiபே யனே ஹஉஉடிரவேiபே ஹபநnஉல ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவி லைப்படியிலிருந்து மாதம் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகின்றது. அதே அள விற்கு மத்திய அரசாலும் செலுத்தப்படுகிறது .இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி மீள எடுக்கப் படாத வகையில் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் அடுக்கு-1 (சூடிn-றவைானசயற யடெந யீநளேiடிn வசைந-1 யஉஉடிரவே) ல் வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் விலகும்போது, சேர்ந்துள்ள பென்சன் தொகையில் 40 விழுக்காடு காப்பீடு முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சிக் குழுமம் (ஐசுனுஹ-ஐளேரசயnஉந சுநபரடயவடிசல யனே னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல) ஒன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை பெறும் வகையில் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 விழுக்காட்டுத் தொகையை மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

60 வயதிற்கு முன்னதாக இத்திட்டத்திலி ருந்து விலக வேண்டியிருந்தால் ஐசுனுஹக்கு 80 விழுக்காடு தொகை கட்டாயமாக செலுத் தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்த ஊழியர் ஒருவர் இடையில் இறந்துபோனால் ஓய்வூ தியக் கணக்கில் உள்ள தொகை முழுவதும் அவரது நியமனதாரருக்கு அளிக்கப்படும்.

இதுவரை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்காக 4 ஆயிரத்து 181 கோடியே 97 லட்சம் ரூபாய் டிரஸ்டி வங்கிக்கு (வசரளவநந யெமே) செலுத்தப்பட்டுள்ளது.

இறப்பு, ராஜினாமா ஆகிய காரணங்களுக் காக தொகையை திரும்பக் கேட்டு

22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டில் இந்த திட்டம் 1-04-2003-லிருந்து அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களிடமிருந்து மட்டும் 10 விழுக் காடு தொகை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மாநில அரசு அதற்கு இணையான தொகையை (அயவஉாiபே உடிவேசiரெவiடிn) செலுத்தவில்லை...

தமிழக அரசு ஆணை எண்.222, நாள்

3-06-08-ல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய் யப்பட்ட தொகைக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கி ஆணையிட்டுள்ளது.

இந்த தொகையை பராமரிக்க மத்திய அரசு நியமனம் செய்தது போல் தனி நிறுவனம் ஏதும் அமைக்கப்படவில்லை. மாறாக அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மாநில கணக்காயரிடம் அளிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக முறையாக சட்டம் அமலாக்கப்படாததால், மாநில கணக்காயர் இந்த தொகையை அனாமத்து கணக்கில் வைத்துள்ளார்.

மேலும் பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து யூனியன்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய கணக்கினை மாநில உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்குனர் பராமரித்துவர அரசு ஆணையிட் டுள்ளது (அரசு ஆணை எண்.201, நிதி (ஓய்வூ தியம்), நாள் 21-05-2009). இதனால் இறந்து போன, இடையில் நின்றுவிட்ட அரசு ஊழியர் களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

திரிசங்கு பென்சன்

புதிய பென்சன் திட்டமும் இல்லாமல் பழைய திட்டமும் இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆணை எண்.175, சமூக நலத்துறை, நாள்

15.9.2008 ல் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் என்று ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி சத்துணவு அமைப்பாளர், அங்கன் வாடி பணியாளர்களுக்கு ரூ.700, அங்கன் வாடி உதவியாளர் நிலை-ஐ சமையலர்களுக்கு ரூ.600, அங்கன்வாடி உதவியாளர் நிலை-ஐஐ சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.500 என மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.

பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய அமெரிக்காவில் பல லட்சம் கோடி ரூபாய் ஓய் வூதியத்தொகை மூழ்கிப்போனது. இதற்கு பிற கும் கூட மத்திய அரசு பிடிவாதமாக இதை உலக வங்கியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அமல்படுத்துகிறது. பெரும் மூலதனத்தை திரட்டிட புதிய பென்சன் திட்டத்தை இன் றைய முதலாளித்துவ நாடுகள் பயன்படுத்து கின்றன.

பிற மாநில அரசுகளின் நடவடிக்கை..

மத்திய அரசு அமைத்துள்ள ஞகுசுனுஹ அமைப்போடு இதுவரை 15 மாநிலங்கள் உடன் படிக்கை மேற்கொண்டுள்ளன.

ஆனால் இதுவரை ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் பி.எப்.ஆர்.டி.ஏ.வில் 159 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன.

மற்ற மாநிலங்கள் கணக்கை பராமரிப்ப தில் சிரமம் உள்ளதால் பணம் செலுத்த முடிய வில்லை என்றும் கர்நாடக மாநிலம் பிஎப்ஆர் டிஏவில் சேர ஒரு சந்தாதாரருக்கு ஆண்டு கட்டணம் ரூ.450-ம் இணைப்புக் கட்டணம் ரூ.50 என்பது அதிகம் என்பதால் சேர யோசித்துக்கொண்டுள்ளன.

குஜராத்தில் கடந்த 5 வருடகாலமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது வரை 31,000 ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகை யை கையாள பண்டு மேனேஜர்களாக ஸ்டேட் பாங்க், எல்ஐசி மற்றும் யூடிஐ வங்கி கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இந்த திட்டம், 1-09-2004 முதல் அமல்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசு அமைத்துள்ள பி.எப்.ஆர்டி.ஏ வுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தாலும் நிதியை இதுவரை செலுத்தவில்லை.

கர்நாடகாவில் இந்த திட்டம் 1-04-2006 முதல் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதுவரை 65,000 ஊழியர்கள் இந்த திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் மத்திய அரசு அமைத்துள்ள நிறுவனத்துடன் உடன் பாடு செய்துகொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இந்த திட்டம் 2010 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டு வரப்படு கிறது.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநில இடதுசாரி அரசுகள் இந்த புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தமாட் டோம் என அறிவித்தன. தற்போது கேரளத்தி லும், மேற்குவங்கத்திலும் அரசுகள் மாறிவிட் டதால் அங்கேயும் புதிய பென்சன் திட்டம் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பென்சன் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்புத்திட்டம் என்ற பெயரில் அவர்களி டமிருந்து சந்தா தொகை பெற்று அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நரியின் வாலை அறுத்து நரிக்கு சூப் வைத்து தருவது போல், இத்திட்டத்திற்கென மத்திய அரசு நிதி போது மான அளவிற்கு ஒதுக்காத காரணத்தினால் இந்திய நாடுமுழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேராமல் புறக்கணித்துவிட்டனர்.

பங்குச் சந்தைகளில் நிதி மூலதன குவிய லுக்கு வழி வகுக்கும் இந்த புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் எதிர்ப் புக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கை யில், ஆளுங்கட்சியான காங்கிரசும் எதிர்க்கட் சியான பாரதிய ஜனதாவும் கைகோர்த்துக் கொண்டு இந்த புதிய பென்சன் திட்டத்திற் கான மசோதாவை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக உழைப்பாளி மக்கள் வெகுண்டு எழுந்து போராடிக்கொண்டுள்ள நிலையில், புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து இந்திய நாட்டு தொழிலாளிவர்க்கம் இதை எதிர்த்து நடத்தும் போராட்டமே உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.