தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, April 16, 2011

தேர்தல் ஜாக்கிரதை

ஜனநாயகம் வெல்லும் -க.ராஜ்குமார் - நன்றி தீக்கதிர் - 1304-11 தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் தேர்தல்களத்தில் பணப்புழக்கம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி யுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை தமிழ்நாட்டில் 33.11 கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டுள்ளது என்றும் 12.58 கோடி ரூபாய் மதிப் புள்ள பரிசுப் பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிடிபட்ட பணம் ஒரு சில கோடிகள் என்றால் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிய பணம் பல ஆயிரக் கணக் கான கோடி ரூபாய் இருக்கும். ஏனெனில் இன்று சில தொகுதிகளில் ஒரு ஓட்டிற்கு ரூ.1000 வரை தரப்படுகிறது. இது ஒன்றும் இரகசியமான விஷயமாக கருதப்படவில் லை. பகிரங்கமாக இன்று பலதொகு திகளில் பணப்பட்டுவாடாவை செய்துவரு கின்றனர். பணம் கடத்துவதில் தங்களின் திறமை யையும், அதிகாரத்தையும் இவர்கள் பயன் படுத்த தவறுவதில்லை. சமீபத்தில் சென் னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணை யம் அதிர்ச்சியான தகவலை தெரிவித் துள்ளது. காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் கடத்தப்படுவதாகவும் இதுகுறித்து அந்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான பேரூந்திலிருந்து ரூ.5 கோடிக் கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டில் மட்டும், இதுவரை 975 வழக்குகள் பணப் பரிவர்த்தனை மற்றும் பரிசுப்பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங் கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன என் றும் தெரிவித்துள்ளார். தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே பெருமளவிற்கு பணப்புழக்கம் அதி கரித்துள்ளது என்பது அவரது அறிக்கையி லிருந்து தெரியவருகிறது. தேர்தல் ஆணை யம் கடுமையாக நடவடிக்கை எடுத்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பதே அவரின் செய்தியாக உள்ளது. சில பகுதிகளில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா குறித்து தகவல் கிடைத்திருப்பதாகவும் அத் தகைய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந் தாலும் தேர்தல் ஆணையம் அவற்றினை ரத்து செய்து மறுதேர்தல் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாக்காளர் பணம் பெறுவதும் குற்றம் என்றும், ஓராண்டுவரை இதற்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என வும் அவர் எச்சரித்துள்ளார். ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஊழல் செய்து கோடிக் கணக்கில் சேர்த்துவைத்துள்ள பணத்தில் ஒருபகுதியை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதின் மூலம் அவர் களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைத்து வருகின்றனர். எனவேதான் இந்த வேலையில் அமைச்சர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்கள் ஏமாறத்தயாராக இல்லை. பணப் பட்டுவாடா செய்ய வருபவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டுள்ள அவர்கள், ஊழலில் கொழுத்த வேட்டையாடிய இவர்கள், தங் களுக்கு எலும்புத் துண்டை வீச வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். பல இடங்களில் பணம் கொடுக்க வரு பவர்களை மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைக்கும் புகார்களை முன் கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு கால தாமதமாக சென்று சமூகவிரோதிகளை தப்பவிட்டுவிடுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங் களிலிருந்து வந்துள்ள தேர்தல் அதிகாரிகள் இதனை தெரிந்துகொண்டு அவர்களின் நேரடிப் பார்வையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு பணப் பட்டுவாடாவை தடுத்து வருகின்றனர். இதனால்தான் கோபமடைந்த சிலர் தேர்தல் ஆணையத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். முன்னெப்பொழுதும் கண்டிராத அளவிற்கு இந்த தேர்தலில் பணம் புரண்டாலும் மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளை கண்டு முகம் சுழித்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என பல்வேறு ஊழல்கள் குறித்து அறிந்துள்ள மக்கள் இன்று தேர்தலில் விநியோகிக் கப்படும் பணத்தை அருவருப்புடன் பார்க் கின்றனர். இந்த ஊழல் கூட்டணி வேட் பாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து ஆட்சி யில் அமர்த்தி னால் இந்தியாவையே விற்று விடுவார்கள் என மக்கள் கருதிவிட்டனர். எனவே இத்தகையவர்களை தண்டிப்பது என முடிவெடுத்து விட்டனர். இந்த தேர்தலில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் முன்னுக்கு வந்திருந்தாலும் மக்கள் முதன் மையாக பார்ப்பது ஊழல் பெருச்சாளிகளின் கொள்ளையோ கொள்ளையைத்தான். கொள் ளையடித்த பணத் தின் மூலம் மீண்டும் ஆட் சியைப் பிடித்து விட்டால் என்று நினைப்ப வர்களை அப்புறப்படுத்த மக்கள் முடிவெ டுத்துவிட்டனர். எனவே இந்த தேர்தலில் பணநாயகத்தை வீழ்த்தி வெல்லப்போவது ஜனநாயகமே!

No comments:

Post a Comment