தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, October 7, 2011

அவர் ஒரு அயர்வறியா போராளி!
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் -07-10-2011

தோழர் எப்.எம்.கே என்று அனை வராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் எப்.எம்.குத்புதீன் அவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றவர். தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.

ஆங்கிலத்தில் புலமையும், அறிவாற்றலும் மிக்க தோழர் எப்.எம்.கே வடிவமைத்துக் கொடுத்த அமைப்பு விதிகள் (உடிளேவவைரவiடிn) தான் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களின் அமைப்பு விதிகளாக அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின் றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வரு வாய்த்துறையில் பணியாற்றினாலும் அனைத் துத் துறை ஊழியர்களாலும் பெரிதும் மதிக்கப் பட்டவர்.

தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தோழர் ஜே.எஸ்.பரதன் ஆகியோருடன் இணைந்து அரசு ஊழியர் இயக்கத்தில் பணியாற்றி முத் திரை பதித்தவர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவ ரான எப்.எம்.கே. அதன் தலைவர்களான, மது ரை கூடலிங்க பிள்ளை மற்றும் புதுக்கோட் டை சுப்பிரமணியம் ஆகியோரின் நம்பிக் கைக்கும் அன்பிற்கும் உரியவராக திகழ்ந்தார். அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை ஒன்று திரட்டிட அவர்கொண்ட முயற்சிகள் அளவற் றது. இறுதியில் அவர் அதில் வெற்றியும் பெற் றார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்-ஆசிரியர் களிடையே ஒரு கூட்டமைப்பு உருவாக அவர் காரணமாக இருந்தார். அரசுப்பணியில் கேந்திரமாக உள்ள வருவாய்த்துறையை பொதுப் போராட்டத்திற்கு கொண்டுவந்ததின் மூலம் இதை அவரால் சாதிக்க முடிந்தது. இன்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பொது இயக்கத்தில் முன்னணியில் இருப்ப தற்கு வித்தாக இருந்தவர் தோழர் எப்.எம்.கே என்றால் அது மிகையாகாது.

அவரது அறிவாற்றல் காரணமாக பேச்சு வார்த்தைகளின்போது அரசு அதிகாரிகளை திணறடித்தவர். இவர் அரசிற்கு கொடுக்கும் முறையீடுகளே ஆணைகளாக வெளியிடு மளவிற்கு ஆங்கிலத்தில் எழுத்தாற்றல் மிக்க வர். அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடத்தை விதிகளை முழுமையாக அறிந்திருந்தவர். அதன் கொடுமைகளிலிருந்து ஊழியர்களை காப்பாற்றுவதில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

ஒரு சமயம் திருநெல்வேலி மாவட்டத் தில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வர், அங்கிருந்த ஊழியர்களை பழிவாங்கிய போது, பொதுச்செயலாளராக இருந்த எப். எம்.கே அவருக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடி தம் அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோபத்தை மூட்டியது. அவர் எப்.எம்.கே மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்துவிட்டார். இந்த வழக்கை தோழர் எப்.எம்.கே. திருநெல்வேலி மாவட்டத்திலி ருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, புகழ்பெற்ற வழக்கறிஞர் மறைந்த தோழர் என். டி.வானமாமலை அவர்களை தனது வழக்கறி ஞராக நியமித்து எதிர்கொண்டார். இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக் கும் உள்ள எழுத்துரிமை, பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது என்று வாதிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கொடுத்த புகாரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வைத்தார்.

1980-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வ ராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு அவசரச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றிவந்த பல்லாயிரக் கணக்கான கிராம அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். பணி இழந்தவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் இன்றி வருவாய் நிர்வாகமும் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்த அவசரச் சட்டத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் எப்.எம். கே ஒரு அறிக்கை வெளியிட்டார். அவரது இந்த அறிக் கை உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல் லப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராம அதிகாரிகள் உரிய நிவாரணம் பெற்றார்கள் என்பது வரலாறு. அவரது தன்னிகரற்ற திறமையினால் ஆயிரக் கணக்கான கிராம ஊழியர்கள் மறுவாழ்வு பெற்றனர்.

1981-ல் கருவூலகணக்குத்துறை அலுவ லர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வகை யில் வருவாய்த்துறை அலுவலர்களை கருவூ லத்துறை அலுவலர்களின் வேலைகளில் ஈடுபடும்படி அன்றைய அரசு கேட்டுக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் வரு வாய்த்துறை அமைச்சராக எஸ்.டி.சோமசுந் தரம் பொறுப்பேற்று, வருவாய்த்துறைக்கு பல் வேறு காரியங்களைச் செய்துகொண்டிருந்தார். பொதுச்செயலாளராக இருந்த தோழர் எப்.எம்.கே. எந்த ஒரு நிலையிலும் போராடும் ஊழியர்களுக்கு எதிராக கருங்காலிகளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை செய்ய முடியாது என அறிக்கை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலு வலர்கள் தோழர் எப்.எம்.கே அவர்களின் அறிக்கையை ஏற்று கருவூலத்துறை அலுவ லர்களின் பணிகளை செய்ய மறுத்தனர். அடுத்து கூடிய மாநில செயற்குழுவும் பொதுச்செயலாளரின் நிலைபாடு சரியென ஒப்புதல் தந்தது குறிப்பிடத்தக்கது.

தனது பணியின் துவக்கக் காலத்தில் தான் சந்தித்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுத்தவர் தோழர் எப்.எம்.கே. அவரது காலத்தில் அரசு அலுவலகங்களில் இரண்டு குடிநீர் பானைகள் இருக்கும். இந்த கொடுமையை கண்டு கொதித்தெழுந்தவர் எப்.எம்கே. தான் பணியாற்றிய அலுவலகத் தில் இருந்த இந்த பானைகளை தூக்கிப் போட்டு உடைத்தவர் அவர். அடிமைகளாக அரசுஊழியர்கள் இருந்த காலத்தில் உரிமை களுக்காக அவர்களை திரட்டி போராடியவர். இடதுசாரி முற்போக்கு எண்ணம் கொண்டவ ரான தோழர் எப்.எம்.கே. அரசு ஊழியர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பாக செயலாற்றியவர்.

அரசுப் பணியில் துணை ஆட்சியர் (னுநயீரவல ஊடிடடநஉவடிச) பணி வரை உயர்ந்த அவர், தனது தொழிற்சங்கப் பணியை ஒருபோதும் கைவிட் டதில்லை. அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற் றபிறகும் தனது எழுத்தாற்றலை பயன்படுத்தி பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அவரது கைவிரல் அசையும்வரை எழுதி அதிர்வுகளை உண்டாக்கியவர். கருப் புப் பணம் குறித்து அவர் இருபது வருடங் களுக்கு முன் எழுதியது இன்று வெளிச்சத் திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment