தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, January 18, 2012

லோக்பால் மசோதாவை முடக்கிய ஆளும் கட்சி

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
-க.ராஜ்குமார்-

நன்றி தீக்கதிர்


நாடே பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்பால் மசோதாவை காங்கிரஸ் தனக்கே உரிய தந்திரமான வழி முறைகளை பின்பற்றி மாநிலங்களவை யில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொண்டது.

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசில் பங் கேற்கும் அரசியல்வாதிகள் ஆகியோரின் ஊழல்கள் குறித்த புகார்களை விசாரிப் பதற்கு ‘லோக்பால்’ என்ற மத்திய அமைப் பும், இதேபோன்று மாநிலஅளவில் புகார் களை விசாரிக்க ‘லோக் அயுக்தா’ என்ற அமைப்பும் உருவாக்குவது என்பதே லோக்பால் மசோதாவின் நோக்கமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத் தாராம் யெச்சூரி குறிப்பிட்டிருப்பதுபோல், 44 ஆண்டுகாலமாக இந்த மசோதாவை, ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி முடக்கி வைத்துள்ளது. முதன்முதலில், 1968-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி, 4வது மக்க ளவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற் றப்படுவதற்கு முன்னதாக மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியாகி விட்டது. பின்னர் 5-வது மக்களவையில் 11-08-1971ல் கொண்டுவரப்பட்டு, நிறை வேற்றப்பட்ட லோக்பால் மசோதாவும் இதேபோல் மாநிலங்களவையில் நிறை வேற்றப்படுவதற்கு முன்னதாக மக் களவை கலைக்கப்பட்டதால் காலாவதி யாகிவிட்டது.

தொடர்ந்து 1977, 1985, 1989, 1991, 1996, 1997, 2001ம் ஆண்டுகளில் லோக்பால் மசோதா குறித்து பேசப்பட்டு, மக்கள வையில் மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்படாமல் போய்விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால கட் டங்களில் பிஜேபி ஆட்சியில் இருந்த காலகட்டமும் உண்டு. இப்போது பிஜே பியும், காங்கிரசும் மசோதா நிறைவேறாமல் போனதற்கு ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டுள்ளன.

நடந்து முடிந்த கூட்டத்தொடரின் போது, மத்திய அரசின் முயற்சிக்கு தொடர்ந்து, மூன்று முக்கிய பிரச்சனை களில் தோல்வி கிடைத்துள்ளது. நாடாளு மன்றம் நடைபெற்றுக்கொண்டிருக் கும்போதே அமைச்சரவை கூடி சில் லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங் களின் முதலீடுகளை அதிகரிக்க அனு மதி அளித்ததை எதிர்த்து எதிர்க்கட் சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடத்திய போராட்டங்களின் விளைவாக அந்த முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டியிருந்தது.

இரண்டாவதாக, ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கான (ஞஞகுசுனுயு) மசோ தாவை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொ டரில் மக்களவையில் தாக்கல் செய் திருந்த மத்திய அரசு, இக் கூட்டத் தொடரில் எப்படியேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிஜேபி தலைவர் அத்வானியை சந்தித்து ஆத ரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் காங்கிரஸ் கூட் டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இம்மசோதாவை திருத்த வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததின் காரணமாக மத்திய அரசு இக் கூட்டத்தொடரில் இம் மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியை கைவிட்டது.

மூன்றாவதாக, லோக்பால் மசோ தாவை மக்களவையில் நிறைவேற்றிய அரசு, அதற்கான சட்டத் திருத்தத்திற்கு போதுமான ஆதரவினை பெற தவறிய தாகும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்கள் கட்சி கொறடா உத்தர வினை மீறி இம்மசோதாவிற்கு வாக் களிக்க மக்களவைக்கு வரவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகளின் 7 உறுப்பினர்களும் மக்கள வைக்கு வராமல் இருந்துவிட்டனர். இத் தகைய பின்னணியில்தான் மாநிலங்கள வைக்கு லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. மக்களவையிலும், மத்திய அமைச்சரவையிலும் இம்மசோதா குறித்து வாய் திறக்காத காங்கிரஸ் கட்சி யின் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற முடியாமல் தடுத்தது ஆச்சரி யமளிப்பதாக உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ரஜினிதி பிரசாத் என்பவர் அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோ தாவின் நகலை பறித்து அவையில் கிழித் தெறிந்த காட்சியை பார்த்து நாடே வெட்கி தலை குனிந்தது. அது சமயம் மாநிலங் களவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடத்தில் அமர்ந்து இந்த காட்சியை ஆர்.ஜே.டியின் தலைவர் லல்லுபிரசாத் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் - ஆர்ஜேடி இணைந்து நடத்திய நாடகம் என பிஜேபி விமர்சித்துள்ளது. ஆனால் பிஜேபியின் தலைவர் அருண்ஜெட்லி மாநிலங்கள வையில் இந்த மசோதாவின் மீது ஒரு நீண்ட நெடிய உரையாற்றி காலத்தை வீணடித்ததே மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு காரணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த மசோதா நிறைவேறாதபடி காங் கிரஸ் நடந்துகொண்டது என்பது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக் கப்பட்ட தாக்குதலாகும் என மார்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத் தாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, லோக்பால் மசோ தாவை நிறைவேற்றுவதற்கென நாடாளு மன்ற கூட்டத்தொடரை இம்மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நீட்டித்த மத்திய அரசு, 29 ந்தேதி இரவு 12 மணி வரை விவாதத்தை இழுத்தடித்து, வாக்கெடுப்பு இல்லாமல் ஒத்திவைத்தது சரியல்ல என்றும், இத்தகைய சூழ்நிலைகளில் ஜனாதிபதியின் அனுமதி இல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தை நீட்டிக்க முடியும் என்றும், இதற்கு முந்தைய நிகழ்வு கள் பல உதாரணம் உள்ளன என்றும், 2004 ஜனவரி முதல் வாரத்தில் இப்படிப் பட்ட சம்பவம் நடந்துள்ளது என்றும், அது மட்டுமல்ல உச்சநீதிமன்றமும் இத்த கைய சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட் டத்தொடரை முன்னெடுத்துச் செல்ல லாம் என கருத்து தெரிவித்திருப்பதாகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதிலி ருந்து காங்கிரஸ் இந்த மசோதாவை அரைமனதோடுதான் மாநிலங்கள வைக்கு கொண்டுவந்தது என்பது அறிய முடிகிறது.

காங்கிரஸ், பிஜேபி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட் சிகள், முறையற்ற நடவடிக்கைகளின் காரணமாக ஒரு வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டுவருவதில் தடை யாக நிற்கின்றன.

ஆர்ஜேடி, லோக்பால் மசோதா சட்ட மாக்கப்படும்போது அதன்கீழ் அமைக்கப் படும், குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான குழுவில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தனது கோரிக் கையை வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பூனையும் எலியும் போல் உள்ள திமுக மற்றும் அண்ணா திமுக, லோக்பால் மசோதாவின் கீழ், மாநில அளவில் ‘லோக் அயுக்தா’ என்ற குறைகேட்கும் பிரிவை அமைப்பதில் மாநி லங்களின் உரிமை பறிபோகக் கூடாது என்று ஒன்றுசேர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. மாநிலங்களவையில் திமுகவும் அண்ணா திமுகவும் இம்மசோதாவை எதிர்த்தன. கர்நாடகம் உள்பட தற்போது இத்தகைய அமைப்பு சில மாநில அரசு களால் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய அமைப்பை உருவாக்க மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதும் கவ னிக்கத்தக்கது;

இருப்பினும், இத்தகைய ‘லோக் அயுக்தா’ என்ற அமைப்பை உருவாக்கும் விஷயத்தில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண் டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும்.

தற்போது இந்த மசோதாவிற்கு எதிர்க் கட்சிகள் 187 திருத்தங்களை கொண்டு வந்திருப்பதால் அவற்றினை பரிசீலித்து, மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் நிறை வேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலில் ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், கார்கில் போர்த் தியாகிக ளின் வாரிசுகளுக்கு வீடு கட்டியதில் ஊழல், யமுனை - கோதாவரி படுகை களில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில் ஊழல், அந்நிய நாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கான கருப்புப் பணம் முதலீடு செய்திருப்பது தொடர்பாக அதிகார பூர்வமான தகவல்கள் வெளி வந்தது போன்ற நிகழ்வுகள் குறித்து இடது சாரிகள் நடத்திய இயக்கங்களின் விளை வாக இந்திய நாட்டு மக்களிடையே ஏற் பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு மக் களின் ஆதரவு அமோக கிடைத்து வரு வதை பார்த்த முதலாளித்துவ கட்சிகள் அதை நீர்த்துப்போவதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

ஊழல் புரிபவர்கள் அரசியல்வாதி களாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந் தாலும், அவர்கள் யாராக இருப்பினும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத் தின் அடிப்படையில் ஒரு வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்று வது என்பது மக்களின் தொடர் போராட் டங்களின் மூலமே சாத்தியமாகும்.

No comments:

Post a Comment