தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, June 25, 2010

மே தின வரலாறு - May Day History


மரம் தனது கனிகளால் அறியப்படும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 27-04-10


மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் கள் ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித் துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒரு வரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதி யாக முழக்கமிட்ட வார்த்தை இது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீது, காவல் துறையினரை நோக்கி குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந் தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர் கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி யன்று சிகாகோ நகரில் 40000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண் டிருந்தார். அமைதியான முறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொலலப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர்.

காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்ட மிடப்பட்டு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்கெட் என்ற பகுதியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜேட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டன கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந் தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்ட னர். இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரி யின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும் படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந் தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்த னர். காவல்துறையினர் உடனடியாக துப் பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர், காய முற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக் கப்படவே இல்லை.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்க ளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என குற்றம் சாட்டப்பட்டு, 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டி ருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார் சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென் றிருந்தார். எனினும் தொழிலாளர் தலைவர் கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட் டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல் பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகி யோர் மட்டும்தான். ஆனால் 8 தலை வர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத் தனர். தங்களின் உரிமைக்கான போராட் டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர். அரசு வழக்குரை ஞரோ தலைவர்கள் பின்னால் ஆயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் திரண்டதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர் களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் தொழி லாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது. எங்களுக்கு வழங் கப்பட்ட மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி எங்கெங்கும் பரவி உரிமைக்கான போராட்டங்களாக கொழுந்துவிட்டெரியும் என முழக்கமிட்டார். 125 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.

கட்டுரையாளர், முன்னாள் மாநிலத் தலைவர், அரசு ஊழியர் சங்கம்

No comments:

Post a Comment